தெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவி விலகல்?

ஆந்திராவில் தெலங்கானா விவகாரம் கடந்த 2009ம் ஆண்டில் இருந்தே மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சில மாதங்கள் அமைதியாக இருந்த பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது.. தெலங்கானா விவகாரம் தொடர்பாக, ஆந்திர காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் நீடிப்பதால் இறுதி முடிவுக்கு வர முடியாமல் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தவிக்கின்றன.
தெலங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், தனித் தெலங்கானா அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்கள் பள்ளம் ராஜு, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து தெலங்கானா மாநிலம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தற்கொலைக்கு சமம் என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சோனியாவிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது பதவி விலகல் கடிதத்தையும் வெள்ளியன்றே, சோனியாவிடம் அவர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. தெலங்கானா தனித் மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் வரும் தகவல் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதெல்லாம் இல்லை
அதேசமயம் முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா பற்றி விவாதிக்க வில்லை என்று பழங்குடியின நலத்துறை அமைச்சர் பசுபதி பாலராஜூ கூறியுள்ளார். கேபினட் அமைச்சர்களிடமோ, சீமாந்தரா எம்.பிக்களிடமோ கூட ராஜினாமா பற்றி தெரிவிக்கவில்லைஎன்றும் அவர் கூறியுள்ளார். மாநிலப்பிரிவினையால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிதான் காங்கிரஸ் தலைமையிடம் பேசினார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இறுதி முடிவு
கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர்களான திக் விஜய் சிங் மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், ராயலசீமாவை உள்ளடக்கிய தனித் தெலங்கானா உருவாக்குவது பற்றி தலைவர் சோனியா காந்தி இறுதி முடிவு எடுத்து விட்டதாகவும், அம்மாநில முதலமைச்சர் என்ற முறையில் கட்சியின் முடிவை செயல்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கிரண்குமாரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், இதில் தனக்கு உடன்பாடில்லை என கிரண் குமார் கூறியதாகவும், இதையடுத்து சோனியாவை சந்தித்து இதுபற்றி விளக்கும்படி, ஆசாத் அவரிடம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ராயல தெலுங்கானா
இதனிடையே 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனித் தெலுங்கானாதான் தங்களுக்கு வேண்டும் என்று டி.ஆர்.எஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ராயலசீமாவையும் சேர்த்து ராயல தெலுங்கானாவை நாங்கள் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். தங்களின் தெலுங்கானாவிற்கு ஹைதராபாத் நகரை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பதும் டி.ஆர்.எஸ் கட்சியினரின் கோரிக்கையாகும்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications