சசி அண்ணன் மகன் பஸ் கவிழ்ந்து 40 பேருக்கு படுகாயம்
புதுக்கோட்டை: சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்குச் சொந்தமான பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். இவர் ஒரு பஸ் ஓனர் ஆவார். இவருக்குச் சொந்தமான பி.வி.எம் என்ற தனியார் பேருந்து புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியிலிருந்து தஞ்சாவூர் செல்கிறது. இந்தப் பேருந்து இன்று பிற்பகலில் அதிராம்பட்டினம் வந்து சேர்ந்தது.
பின்னர் ஏராளமான பயணிகளுடன் பேருந்து கிளம்பியது. புறநகர்ப் பகுதியில் வந்தபோது திடீரென எதிரே ஒரு ஆட்டோ குறுக்கிட்டது. இதையடுத்து அது மீது மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்தை டிரைவர் வேகமாக திருப்பினார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பேருந்து மோதி கவிழ்ந்து விழுந்தது.
இதில் பேருந்துக்குள் இருந்த 40க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறித் துடித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை எப்படி நடைபெறும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications