மேட்டூர் அணை ஆக.2-ந் தேதியே திறப்பு- முதல்வர் ஜெ. உத்தரவு!

மேட்டூர் அணை வழக்கமான ஜூன் மாதம் திறக்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் கர்நாடகா போதுமான நீரை திறந்துவிடாத நிலையில் ஜூன் மாதம் அணை திறக்கப்படவில்லை.
தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்துவருகிறது. தமிழகத்துக்கு நீர் திறந்துவிடப்படக் கூடிய கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்துக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 100 அடியை தாண்டிவிட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடுத்தர சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 12-ந் தேதி திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக் 10 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 2-ந் தேதியே அணை திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் 6 ஆயிரம் கன அடிநீர் அளவை 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்றும் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications