மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்தை மறு ஆய்வு செய்ய கூடாது: பிரதமருக்கு ஜெ.கடிதம்

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ, பல் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் ‘நீட்' என்னும் பொது நுழைவுத்தேர்வினை அகில இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்து அறிவிக்கை வெளியிட்டது. இந்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் 115 வழக்குகளும் தொடரப்பட்டன. அவற்றை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு விசாரித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்தும், அகில இந்திய ரீதியில் நுழைவுத்தேர்வு நடத்த தேவை இல்லை என்றும் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. இது நாடெங்கும் பல்வேறு தரப்பினருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரப் போவதாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தகவலால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு காட்டாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு முழுமையாக ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் முடிவை கைவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications