ஸாரி பார் யுவர் லைப்... குட்பை... கணவருக்கு கடிதம் எழுதி விட்டு பெண் தற்கொலை
சென்னை: என்னை பொறுக்கி என்று நினைத்து பேசக்கூடாத வார்த்தைகளால் போனில் திட்டினீர்கள். இனிமேல் நான் இருக்க போவதில்லை. நீங்கள் எங்கேயும் என்னை கூட்டி செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஸாரி, பார் யுவர் லைப், குட் பை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குருசுப்பிரமணியன். இவரது மனைவி பெயர் சரிகா, 24 வயதாகிறது. இவர்களுக்கு ராமநாதபுரம்தான் சொந்த ஊர். இந்தத் தம்பதிக்கு அகில் காளீஸ்வரன் என்ற குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு அடுத்த மாதம் முதலாவது பிறந்த நாள் வருகிறது.
இதை குடும்பத்தார், உற்றார் உறவினர்களை அழைத்து சிறப்பாகக் கொண்டாட ஆசைப்பட்டார் சரிகா. இதுதொடர்பாக கணவன் மனைவி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தகராறு வெடித்தது. பேச்சின்போது, உன் அப்பா, அம்மாவை அழைக்கக் கூடாது என்று குருசுப்பிரமணியன் சொல்ல, அப்படிச் செய்தால் உங்க அப்பா, அம்மாவும் வரக் கூடாது என்று சரிகா பதிலடி தர இருவருக்கும் சண்டையாகி விட்டது.
சண்டையின்போது தடித்த வார்த்தைகள் பரிமாறப்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சரிகா அறைக்குள் போய் விட்டார். அங்கு கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் சரிகாவின் கடிதத்தைக் கைப்பற்றினர். அதில், என்னை பொறுக்கி என்று நினைத்து பேசக்கூடாத வார்த்தைகளால் போனில் திட்டினீர்கள். இனிமேல் நான் இருக்க போவதில்லை. நீங்கள் எங்கேயும் என்னை கூட்டி செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. சாரி, பார் யுவர் லைப், குட் பை என்று எழுதப்பட்டிருந்தது.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications