For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் பிக்ஸிங்:டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்! தாவூத், ஸ்ரீசாந்த் உட்பட 39 பேர் மீது புகார்

By Mathi
Google Oneindia Tamil News

IPL Scandal: Sreesanth, Dawood, Chhota Shakeel chargesheeted
டெல்லி: ஐபிஎல் பிக்ஸிங் வழக்கில் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் இன்று தாக்கல் செய்தனர். இதில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 39 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

6வது ஐபிஎல் கிரிக்கெட் பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள், ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சண்டிலா ஆகியோருடன் ஏராளமான சூதாட்ட புக்கிகள் சிக்கி கைதாகினர். இதில் ஸ்ரீசாந்த், சவான் உட்பட 21 பேருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.

இந்த பிக்ஸிங் வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் கமிஷனரின் பதவிக் காலம் வருகிற 31ந் தேதி முடிவடடய உள்ள நிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இக் குற்றப்பத்திரிகையில் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், சாண்டிலா ஆகியோருடன் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ராஹீம், சோட்டா ஷகீல் என மொத்தம் 39 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன, சுமார் 6 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

English summary
Delhi Police on Tuesday named Dawood Ibrahim, Chhota Shakeel and cricketers Sreesanth, Ankeet Chavan and Ajit Chandila as accused in the chargesheet in the IPL spot-fixing case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X