பிசிசிஐ விசாரணை குழு சட்ட விரோதமானது- மும்பை ஹைகோர்ட்!-மீண்டும் சிக்கலில் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

IPL spot-fixing: Bombay HC says BCCI probe panel is illegal
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் பெட்டிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தன்னிச்சையாக விசாரணைக் குழுவை அமைத்தது சட்டவிரோதம் என்று மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர் குந்த்ரா உள்ளிட்டோர் மீது கிரிக்கெட் பெட்டிங் புகார் கூறப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருந்தார் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே இருவர் குழுவை நியமித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக் குழு குருநாத் மெய்யப்பனும் குந்த்ராவும் நல்லவர்கள் எனக் கூறியது.

இது தொடர்பான வழக்கில் இன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன்னிச்சையாக விசாரணைக் குழுவை அமைத்தது சட்டவிரோதம் என்று கூறி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புதிய விசாரணைக் குழுவை அமைக்கவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சீனிவாசன் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+