மழைக்கால பார்லி. கூட்டத் தொடர்.. நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்குகிறது. உணவு பாதுகாப்பு மசோதா, தெலுங்கானா தனி மாநில மசோதா மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான மசோதா போன்றவற்றை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி மத்திய அரசுகு உள்ளது.
இந்நிலையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், உள்துறை அமைச்சரும் அவை முன்னவருமான சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பார்லிமென்ட்டை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications