உடல் பருமனான பெண் டாக்டரை ‘ரோடு ரோலர்’என வர்ணித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

ஜார்கண்ட் மாநிலம் லதேகரியில் கண்சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில் மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். அந்தக் கண் சிகிச்சை முகாமில் பத்மபூஷன் விருது பெற்ற கண் டாக்டர் காஷ்யூப்பின் மனைவியும், மேற்கு சிங்பும் மாவட்ட மருத்துவ பெண் அதிகாரி டாக்டர் பார்தி காசியப்பும் பங்கேற்றார்.
விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ‘டாக்டர் பார்தி உடல் ரீதியில் மட்டும் குண்டானவர் அல்ல. ரோடு ரோலர் போன்று இருக்கும் அவர் தன்னை நோக்கி வரும் பிரச்சினைகளை நொறுக்கி விடுவார்'' என கூறினார்.
டாக்டர் பார்தி குண்டாக இருந்ததையே ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளதாக சர்ச்சைகள் உருவானது. அதனைத் தொடர்ந்து டாக்டர் பார்சியிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது, ‘அமைச்சர் இதை சாதாரணமாக தான் பேசினார். எனவே அதை நான் குற்றமாக கருதவில்லை. கேளிக்கையாக, நகைச்சுவையுடன் தான் குறிப்பிட்டார். இதை ஒரு பெண் டாக்டரை விமர்சித்ததாக கருத கூடாது. இது போன்று சில தடவை என்னை விமர்சித்துள்ளார். ஒரு முறை என்னை புயல் என கூறினார்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications