ராவோடு ராவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் என்.சீனிவாசன்
டெல்லி: செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெயர் அடிபட்டு அவரை மும்பை போலீஸார் தேடத் தொடங்கியதும் சீனிவாசனுக்கு சிக்கல் வந்தது.
அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆரம்பத்தில் முடியாது என்று கூறி வந்தார் சீனிவாசன். ஆனால் நெருக்கடி அதிகரிக்கவே, விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மேலும் அந்த கமிஷனின் விசாரணை முடியும் வரை தான் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாகவும், அதுவரை ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார்.

நல்லவர்.. அப்பாவி
இந்த நிலையில் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை வாரியத்திடம் ஒப்படைத்தது. அதில், குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நல்லவர்கள், தவறு செய்யவில்லை, அப்பாவிகள் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தியா சிமென்ட்ஸும் நல்லதுதான்
மேலும் அந்த அறிக்கையில் சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் மீதும் எந்தத் தவறும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

உடனே தலைவர் பதவிக்கு வந்தார்
இதையடுத்து மீண்டும் தலைவர் பதவியை ஏற்க முடிவு செய்தார் சீனிவாசன். விசாரணைக் கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் பதவியேற்கப் போவதாக வாரிய உறுப்பினர்களுக்கு அவர் தெரிவித்தார்.

ராவோடு ராவாக
இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பாம்பே நீதிமன்றத்திடம் குட்டு
ஆனால் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் நிரபராதிகள், தவறு செய்யாதவர்கள் என்று எப்படி பிசிசிஐயின் விசாரணைக் கமிஷன் கூறலாம் என்று பாம்பே உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

ஆகஸ்ட் 2ம் தேதி பஞ்சாயத்து வருமா...?
ஆகஸ்ட்2ம் தேதி வாரியத்தின் செயல் கமிட்டி கூட்டம் கூடுகிறது. அப்போது பாம்பே உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பிரச்சினை எழுப்ப நிர்வாகிகள் பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications