Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராவோடு ராவாக மீண்டும் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் என்.சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் என்.சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இதுவரை இடைக்காலத் தலைவராக இருந்து வந்து ஜக்மோகன் டால்மியாவின் பொறுப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெயர் அடிபட்டு அவரை மும்பை போலீஸார் தேடத் தொடங்கியதும் சீனிவாசனுக்கு சிக்கல் வந்தது.

அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆரம்பத்தில் முடியாது என்று கூறி வந்தார் சீனிவாசன். ஆனால் நெருக்கடி அதிகரிக்கவே, விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். மேலும் அந்த கமிஷனின் விசாரணை முடியும் வரை தான் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாகவும், அதுவரை ஜக்மோகன் டால்மியா இடைக்காலத் தலைவராக இருப்பார் என்றும் அறிவித்தார்.

நல்லவர்.. அப்பாவி

நல்லவர்.. அப்பாவி

இந்த நிலையில் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை வாரியத்திடம் ஒப்படைத்தது. அதில், குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நல்லவர்கள், தவறு செய்யவில்லை, அப்பாவிகள் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தியா சிமென்ட்ஸும் நல்லதுதான்

இந்தியா சிமென்ட்ஸும் நல்லதுதான்

மேலும் அந்த அறிக்கையில் சீனிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் மீதும் எந்தத் தவறும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

உடனே தலைவர் பதவிக்கு வந்தார்

உடனே தலைவர் பதவிக்கு வந்தார்

இதையடுத்து மீண்டும் தலைவர் பதவியை ஏற்க முடிவு செய்தார் சீனிவாசன். விசாரணைக் கமிஷன் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் பதவியேற்கப் போவதாக வாரிய உறுப்பினர்களுக்கு அவர் தெரிவித்தார்.

ராவோடு ராவாக

ராவோடு ராவாக

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மீண்டும் தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பாம்பே நீதிமன்றத்திடம் குட்டு

பாம்பே நீதிமன்றத்திடம் குட்டு

ஆனால் குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோர் நிரபராதிகள், தவறு செய்யாதவர்கள் என்று எப்படி பிசிசிஐயின் விசாரணைக் கமிஷன் கூறலாம் என்று பாம்பே உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

ஆகஸ்ட் 2ம் தேதி பஞ்சாயத்து வருமா...?

ஆகஸ்ட் 2ம் தேதி பஞ்சாயத்து வருமா...?

ஆகஸ்ட்2ம் தேதி வாரியத்தின் செயல் கமிட்டி கூட்டம் கூடுகிறது. அப்போது பாம்பே உயர்நீதிமன்ற உத்தரவை காட்டி பிரச்சினை எழுப்ப நிர்வாகிகள் பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+