Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நன்றாக நடக்கும் என் அரசை கவிழ்க்க மத்திய அரசு சதி: மமதா பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

Telangana decision renews Gorkhaland demand, Mamata hits out at UPA
டார்ஜிலிங்: தெலுங்கானா தனிமாநிலமாக்கப்படுவதை அடுத்து தனி கூர்காலாந்து கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசின் செயல்களில் தலையிடுவதாகவும், தன் அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாகவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விரைவில் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாகவிருக்கிறது. தெலுங்கானா உருவான பிறகு ஆந்திராவுக்கும், அதற்கும் தலைநகரமாக ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்கு இருக்கும். இந்நிலையில் தனி கூர்காலாந்து கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும் கூர்கா ஜன்முக்தி மோச்சா தலைவர் பிமல் குருங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வரும் சனிக்கிழமை முதல் மோர்சா காலவரையற்ற பந்தில் ஈடுபடவிருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளின் செயல்களில் தலையிடுகிறது என்றும், நன்றாக நடக்கும் தனது அரசை கவிழ்க்க அது சதி செய்வதாகவும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

டார்ஜிலிங்குடன் தெலுங்கானாவை ஒப்பிடக் கூடாது. எல்லாம் தீர்க்கப்பட்ட பிறகு டெல்லி ஏன் அமைதியான சூழலை கெடுத்து, நெருப்புடன் விளையாட குறியாக உள்ளது? கூர்காலாந்து அதிகாரிகளை தனி இயக்கமாக ஆகுமாறு டெல்லி தான் ஆலோசனை வழங்கியுள்ளது. டார்ஜிலிங் நம் மாநிலத்தின் ஒரு பகுதி. நாம் ஒன்றுபட்டு உள்ளோம், இனியும் அப்படியே இருப்போம். அரசியல் கட்சியும், யூனியன் அரசும் ஏதாவது சதி செய்தால் அதை டார்ஜிலிங் மற்றும் மேற்கு வங்க மக்கள் சேர்ந்து முறியடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+