புதிய தலைமுறை டிவி சேனலில் தீவிபத்து… செய்தி ஒளிபரப்பில் தடங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளது புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம். இது எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமானதாகும்.
24 மணிநேரம் செய்திகள், நிகழ்ச்சிகள் புதிய தலைமுறை டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன. இன்று காலையில் அங்குள்ள செர்வர் அறையில் இருந்த யுபிஎஸ்சில் திடீரென தீ பற்றிக் கொண்டது.
இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. எனினும் அலுவலகம் புகை மண்டலாக காட்சியளிப்பதால் செய்தி அறையில் உள்ளவர்கள் வேறு அறைக்கு சென்றனர்.












Click it and Unblock the Notifications