மானாமதுரை அருகே சேவல் சண்டை: 8 பேர் கைது, கத்தி, செல்போன்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

8 arrested for performing cock fight near Manamadurai
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி கிராமத்தில் சேவல் சண்டை நடத்திய எட்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்புவனத்தை சுற்றிலும் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரும்பாலும் மதுரை, சிவகங்கை மாவட்ட எல்லையோர கிராமங்களில் வாரம்தோறும் சேவல் சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூவந்தி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்ஐ ஜெயச்சந்திரன் தலைமையில் கிளாதரி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன், மணப்பட்டி கிருஷ்ணன், மேலூரைச் சேர்ந்த தவக்குமார், தவமணி, மருதுபாண்டி, நாகராஜன், முத்துகுமார்,செழியன் உள்ளிட்ட எட்டு பேர் சேவலை வைத்து சூதாட்டம் நடத்தியதை கண்டு பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய செல்போன்கள், ரொக்கம், 2ஆயிரம், சேவலின் காலில் கட்ட பயன்படுத்திய கத்திகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+