For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அர்ஜென்டினாவில் ரயில் ஓட்டும்போது தூங்கி வழிந்த, செல்போனில் பேசிய டிரைவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரயில் டிரைவர்கள் பணி நேரத்தில் தூங்குவது, செல்போனில் பேசுவது, புத்தகம் வாசிப்பது ஆகியவற்றை செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ஸ்பெயினில் ரயில் விபத்து ஏற்பட்டு 79 பேர் பலியாகினர். அந்த ரயிலின் டிரைவர் வண்டியை ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசியபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவில் ரயில் டிரைவர்கள் வண்டியை ஓட்டும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பியூனஸ் ஏர்ஸில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் மற்றொன்றின் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர். இதையடுத்து டிரைவர்களின் அறையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

காரணம் ரயில் ஓடும் போது டிரைவர்கள் ஹாயாக செல்போனில் பேசியது, புத்தகம் வாசித்தது, தூங்கியது ஆகியவை பதிவாகியுள்ளன. ரயிலில் உள்ள பயணிகளின் மீது அக்கறை இல்லாமல் டிரைவர்கள் இவ்வாறு நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

English summary
Officials told that train drivers in Argentina were caught on video half asleep, reading books, talking on cell phones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X