செங்கோட்டையிலிருந்து பெங்களூர் சென்ற பஸ் மணல் லாரி மீது மோதி 3 பேர் பலி

செங்கோட்டையிலிருந்து நேற்று மாலை 4.30.மணிக்கு பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சென்றது.இப்பேருந்தை ஆலங்குளத்தை சேர்ந்த அந்தோணி சேவியர் ஒட்டி சென்றார்.
அதில், முன்பதிவு செய்திருந்த 5 பயணிகளும், 15க்கும் மேற்பட்ட சாதாரண பயணிகளும் பயணம் செய்தனர். மாற்று ஓட்டுனர் சுவாமிநாதன் பாதிக்கு மேல் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில் பேருந்து சேலம் நல்லூர் அருகே போய்க் கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் சமயம் பேருந்தைத் திருப்பியுள்ளார் ஓட்டுநர். அப்போது எதிர்பாராதவிதத்தில் சாலையின் ஓரத்தில் பழுதாகி நின்ற மணல் லாரியில் பேருந்து மோதியது.
இதில், பேருந்தின் இடது புறம் முன் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் அந்தோணி சேவியர் ,மற்றும் ஒரு பெண், ஆண் பயணி என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து காயம் பட்டவர்களை சேலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்கள் உடல்கள் சேலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அதிகாலையில் நடந்த இந்த விபத்து காண்போரை கண்கலங்க வைத்தது.












Click it and Unblock the Notifications