ஆடிட்டர் ரமேஷ் கொலை: சி.பி.ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

கடந்த 19ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அவரது நண்பர் மனோகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், பா.ஜ.க நிர்வாகிகள் கொலை குறித்து தமிழக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் இதனால் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்த நிலையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications