For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் ரமேஷ் கொலை: சி.பி.ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Auditor ramesh
சேலம்: சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 19ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அவரது நண்பர் மனோகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், பா.ஜ.க நிர்வாகிகள் கொலை குறித்து தமிழக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் இதனால் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்த நிலையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.

English summary
Madras HC has quashed a petition seeking CBI probe into BJP leader Auditor Ramesh murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X