பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் கறுப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட 3000 பேர் கைது
திருச்சி: பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலைய சாலையில் கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உள்ளிட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டியில், பெல் பவர் பிளாண்ட் பைப்பிங் யூனிட் என்ற பாய்லர் ஆலையை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலையில் திருச்சி வந்தார்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமானநிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் அரசியல் கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், தமிழ்தேசிய பொதுவுடமை கட்சியை சேர்ந்த மணியரசன் உள்ளிட்டவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகோ கைது
அப்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உள்ளிட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டு அங்கிருந்த திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கைது
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் திருமயம் பேருந்துநிலையத்தில் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செபஸ்டியன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியினர்
இதேபோல் கறுப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தரணி ரமேஷ் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்பாக கைது செய்யப்படுவதை கண்டித்து, கைதாக மறுத்த நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமருக்கு எதிராக கோஷம்
கைது செய்யப்பட்ட அனைவரும் பிரதமரின் வருகையை கண்டித்து முழக்கமிட்டனர். கொடுங்கோலன் ராஜபக்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு கொடிபிடிக்கிறது என்று தெரிவித்தனர்.
கைதான அனைவரும் சிலமணி நேரங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications