தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இஸ்லாமியமக்களின் புனித நாட்களாக கருதப்படுவது இப்தார் நோன்பு காலம் ஆகும். நோன்பின் மாண்பு மகத்துவமானது. நோன்புகாலத்தில் பள்ளிவாசல்களில் வழங்கப்படும் நோன்புக் கஞ்சி மருத்துவம் மிக்கது.
இக் காலங்களில் மத வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களும் இப்தார் நோன்பு திறக்கும் விழாக்களில் பங்கெடுப்பதும்,அரசியல் கட்சிகள் இந்நிகழ்ச்சிகளை நடத்துவதும் வழக்கம்.திமுக.சார்பில் ஏற்கனவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுவிட்டது. அடுத்து தேமுதிக சார்பில் வரும் 5ம் தேதி அக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து விஜயகாந்த் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் விழா நடைபெறஉள்ளதாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications