இந்திய எல்லையில் ஊடுருவல்: 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய பார்த்த 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதப் பயிற்சி பெற்ற சுமார் 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்க சதித் திட்டம் தீட்டி, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் காத்திருப்பதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருப்பதாகவும் இந்திய ராணுவ வீரர்கள் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களில் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 12 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
இத்தகவலை, இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications