ஆடிப் பெருக்கில் விபரீதம்... பல்வேறு ஊர்களில் நீரில் மூழ்கி 10 பேர் பலி
நாமக்கல்: ஆடிப் பெருக்கின்போது நீர்நிலைகளில் புனித நீராடிய போது நீரில்மூழ்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் காவிரி ஆறு மற்றும் அதன் கால்வாய்களில் குளித்தபோது உயிரிழந்துள்ளனர். ஆடிப் பெருக்கின்போது நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகளில் புனித நீராடி வழிபடுவது வழக்கமாகும். இந்த ஆண்டு ஆடிப்பெரு்க்கின்போது குடும்பம் குடும்பமாக மக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று வழிபட்டனர். குறிப்பாக புதுமணத் தம்பதிகள் அங்கு தாலி மாற்றிக் கொண்டனர்.
இந்த வழிபாட்டின்போது நீரில் மூழ்கி 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ ஆகியோர் நீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் மாதேஸ்வரன் உடல் கிடைத்துள்ளது. ராஜு நிலை தெரியவில்லை.
இதேபோல, தர்மபுரி மாவட்டம் நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் அருள்குமார் (17) மேட்டூர் காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) என்பவர், நண்பர்களுடன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமிடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர்களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் மேலிருந்து குதித்து குளிக்க முற்பட்டபோது கல் இடுக்கில் தலை அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு அடுத்த தென்பெரம்பூரில் வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் (19), ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் குஞ்சுஅப்துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென்றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன்ஹாஜி, டிரைவர் சித்திக் ஆகியோர் உயிரிழந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications