வடக்கு மண்டல ஐஜியாக மஞ்சுநாதா நியமனம்- சிபிசிஐடியிலிருந்து மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிபிசிஐடி ஐஜியாக இருந்து வந்த மஞ்சுநாதா அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சிபிசிஐடி ஐஜியாக இருந்து வந்தவர் மஞ்சுநாதா. பல முக்கிய பரபரப்பான வழக்குகளை சிபிசிஐடி தற்போது விசாரித்து வருகிறது. தர்மபுரி இளவரசன் மரணம், சேலத்தில் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு ஆகியவை அதில் முக்கியமானவை.
இந்த நிலையில் மஞ்சுநாதா திடீரென அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவரை வடக்கு மண்டல ஐஜியாக நியமித்துள்ளனர்.
இதுவரை கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆபாஷ் குமார், நவீனமயமாக்கல் துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications