300 வருட பழமையான பனிமய மாதா ஆலயத்தில் தங்கத் தேரோட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பனி மயமாதா ஆலயத்தில் இன்று தங்க தேர் பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்த பெற்ற தேவலாயங்களில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயமும் ஓன்று. இந்த ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி தேர் பவனியுடன் நிறைவு பெறுவது
வழக்கம்.
10தினங்கள் நடக்கும் இத்திருவிழா வைக் காண நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் இங்கு திரண்டு வருவது வழக்கம்.இந்தாண்டு திருவிழா கடந்த 26ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது.

300 வருட பழமையான ஆலயம்
இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற பழமையான ஆலயம் ஆகும். இந்த ஆலயம் உருவாக்கப்பட்டு 300 ஆண்டுகள் முடிவடைய போகிறது. கடைசியாக தங்க தேரோட்டம் 2007ல் நடைபெற்றது. தற்போது 6 வருடம் கழித்து பனி மய மாதா தங்க தேரில் பவனி வந்துள்ளார்.

திருப்பலி
இதை முன்னிட்டு 4.30 மணிக்கு தேரில் பேராயர் பீட்டர் பர்னாட்டோ தலைமையில் திருப்பலி நடந்தது. 5.15 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், 7 மணிக்கு ஆடம்பர பெருவிழாவும் நடந்தது. தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை வகித்தார்.

தங்கத் தேர் பவனி
தினமும் பல்வேறு ஆராதனைகள் நடைப் பெற்றன.இறுதி நாளன இன்று காலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தங்கதேர் பவனி நடைப் பெற்றது.பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குவிந்த பக்தர்கள்
விழாவை காண இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கபூர், மலேசியா, அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிறிஸ்தவ மக்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கு சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
தங்க தோரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் எஸ்பி துரை மேற்பார்வையில் டவுன் டிஎஸ்பி பெஸ்கி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்க்கள் உள்ளி்ட்ட 900 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications