'ஆந்திராவை பிரித்தால் தமிழ்நாட்டுடன் நகரியை சேருங்கள்'
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். நகரி, நாகலா புரம், விஜயபுரம் போன்ற பகுதிகளில் 60% தமிழர்கள் உள்ளனர்.
ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் ஆந்திரா பிரிவது உறுதியானால் எங்கள் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்து நகரி தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கானாவுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் தமிழர்கள் ஈடுபட்டனர். ஆனால் இம்முறை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு வாழும் தமிழர்கள் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications