பெரியாறு அணை: ஆனந்த் குழுவுக்கு எதிரான கேரள கோரிக்கை நிராகரிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஆனந்த் குழுவுக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இறுதி விசாரணை நடத்தி வருகிறது.

இதில் 4வது நாளாக இன்றும் கேரளாவின் வாதம் நடைபெற்றது. அப்போது, ஆனந்த் குழுவின் அறிக்கைக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கேரள அரசு அனுமதி கோரியது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
அப்போது தமிழகம் தரப்பில், ஆனந்த் குழுவில் சந்தேகம் இருப்பின் உறுப்பினர் சி.டி.தத்தேவை அழைத்து விசாரிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications