9வது நாளாக ஓயாத 'சீமாந்த்ரா' போராட்டங்கள்... 6வது அமைச்சர் ராஜினாமா கடிதம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயல்சீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திராவில் 9 வது நாளாக போராட்டங்கள் இன்றும் தொடர்ந்தன. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 30-ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது 'சீமாந்திரா'. ஏற்கெனவே முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று 6வதாக அமைச்சர் தொட்ட நரசிம்ஹம் தமது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜினாமா செய்த அமைச்சர் விஸ்வரூப் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் அமைச்சர் அருணா குமாரி, திருப்பதியில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார். அவரும் தமது அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காக்கிநாடாவில் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூவின் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். பல்லம் ராஜூ ராஜினாமா செய்யும் வரை போராட்டமும் முற்றுகையும் தொடரும் என்றனர் போராட்டக் குழுவினர்.
ஓங்கோலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. விஜயவடா- மசூலிப்பட்டினம் நெடுஞ்சாலை எங்கும் மாணவர் தலைகளாக காட்சியளித்தன.
மேலும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வேங்கடயபாளையம் முதல் 35 கிலோ மீட்டர் பாதயாத்திரையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொட்ட திருமூர்த்துலு மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரை இன்று மாலை காக்கிநாடாவில் நிறைவடைகிறது.
இதனிடையே ரம்ஜானை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் நாளை மாலை வரை முழு அடைப்பை கைவிடுவதாக ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான கூட்டுக் குழு அறிவித்துள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications