இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாக். ராணுவ சிறப்புப் பிரிவு -ஏ.கே. அந்தோணி

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டை அதிரவைத்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டார். ஆனால் ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முரண்பாடு பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேற்று முடங்கின. இதைத் தொடர்ந்து நேற்று மாலை பாரதிய ஜனதா தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது இன்று அந்தோணி புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வார் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் அறிக்கையை தாக்கல் செய்த ஏ.கே. அந்தோணி, எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் முன்பு அறிக்கையை வெளியிட்டேன். தற்போது ராணுவ தலைமை தளபதி அங்கு நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு என்னிடம் நடந்தது பற்றி விவரித்தார்.
இந்திய ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் என்பவை பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது. இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பிரிவினர்தான்.
நமது பொறுமையை மிக எளிதாக பாகிஸ்தான் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு. தற்போதைய சம்பவத்தின் எதிரொலி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் பாகிஸ்தானுடனான உறவிலும் இருக்கும் என்று எச்சரித்தார்.
ஏ.கே. அந்தோணியின் அறிக்கையை வரவேற்ற பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், தேசப் பாதுகாப்பில் ஒருபோதும் அரசியல் செய்யமாட்டோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications