லோக் அயுக்தாவை கண்டு மோடி அலறுவது ஏன்?: கேட்பது திக்விஜய்சிங்
குஜராத் மாநில லோக் அயுக்தாவுக்கு நீதிபதி மேத்தா அம்மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தம்மை ஆலோசிக்காமல் ஆளுநர் முடிவெடுத்ததை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் நிற்காமல் உச்சநீதிமன்றம் வரை நரேந்திர மோடி போய் பார்த்தார்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி மேத்தாவே பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தது. இந்நிலையில் மோடியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த நீதிபதி மேத்தா தாம் பதவி ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், நரேந்திர மோடி லோக் அயுக்தாவை கண்டு இப்படி அலறுவது ஏன்? நீதிபதி மேத்தா நியமனத்துக்கு எதிராக மட்டும் நீதிமன்ற செலவுகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ45 கோடியை அம்மாநில அரசு செலவிட்டுள்ளது.
குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற காலம் முதலே அங்கு லோக் அயுக்தா இயங்கவே இல்லையே..ஊழலை ஒழிப்பதாகக் கூறிக் கொள்ளும் மோடியின் ஆதரவாளர்களே இதுபற்றி கருத்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.