மணல் கொள்ளையர்கள் மீது விதிப்படி உரிய நடவடிக்கை- தூத்துக்குடி புதிய கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டுவந்த விவி மினரல்ஸ் தனியார் மணல் குவாரிகளில் வருவாய்த்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் திடீரென்று பணிமாறுதல் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக அரியலுர் கலெக்டராக இருந்த ரவிக்குமார் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் 23வது கலெக்டராக இன்று பொறுப்பேற்ற ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் மாவட்ட நிர்வாகத்தை நியாயமான முறையிலும், வெளிப்படையாகவும், ஆர்ப்பரிப்பு இல்லாமலும் சிறப்பாக நடத்துவேன். மாவட்டத்தில் நடந்துள்ள மணல் கொள்ளையில் தவறு செய்தவர்கள் மீது அரசின் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தில் பெரிய மனிதர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களாக கலெக்டராக சிறப்பாக பணியாற்றிய நான், அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் சிறப்பாக பணியாற்றுவேன். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனிஅலுவலராக பணியாற்றிய காரணத்தினால் மாவட்டத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications