சேலம் சிறையில் பரபரப்பு: கொள்ளைக்காரி மைதிலியுடன் மோதிய நக்சலைட் ராகினி
சேலம்: சேலம் பெண்கள் சிறையில் கொள்ளைக்காரிக்கும், பெண் நக்சலைட் கைதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பெண்கள் கிளைச்சிறையில் கோரிமேட்டை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி மைதிலி (28) என்பவர் 21 வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், பெண் நக்சலைட் தர்மபுரியை சேர்ந்த ராகினி (48) என்பவரும் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மைதிலியை பார்க்க தினமும் அதிகளவில் அவரது உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இது ராகினிக்கு எரிச்சலை ஏற்படுத்தவே அதனை தட்டிக்கேட்டு வந்துள்ளார். இந்த விவகாரத்தால், மைதிலிக்கும், ராகினிக்கும் மோதல் ஏற்பட்டது.
ராகினி, 1வது பிளாக்கில் கைதிகள் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடியை உடைத்து வீசியதுடன், மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மைதிலி உள்பட 27 கைதிகள், பெண்கள் கிளைச்சிறை கண்காணிப்பாளர் கணேசனிடம் ‘கண்ணாடியை உடைத்ததுடன் தங்களை மிரட்டி வரும் ராகினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கையெழுத்துபோட்டு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரின் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். பெண் கைதிகளுக்குள் மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications