பாக். தாக்குதல்.. இந்திய கமாண்டர்களுக்கு ராணுவத் தளபதி டோஸ்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சுதாரிப்பாக இல்லாமல் கோட்டை விட்டதற்காக இந்திய எல்லைப்புற கமாண்டர்களுக்கு டோஸ் விட்டுள்ளார் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங்.
பூஞ்ச் பிரிவு கமாண்டர்கள்தான் தளபதியிடம் திட்டு வாங்கியுள்ளளனர்.
2 முறை பாகிஸ்தான் சிறப்பு ராணுவப் படைப் பிரிவினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்களை நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைப் பகுதியில் நேரடி ஆய்வு
பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்திய பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார் பிக்ரம் சிங்.
முன்னணி தளபதிகளுக்கு திட்டு
அப்போது எல்லைப் புறத்தில் கமாண்டர்களாக உள்ளவர்களை சுதாரிப்பாக இல்லாமல் கோட்டை விட்டதற்காக கடிந்து கொண்டாராம் பிக்ரம் சிங்.
ஜனவரி 8ல் 2 பேர் கொலை
இதே பகுதியில்தான் கடந்த ஜனவரி 8ம் தேதி பாகிஸ்தான் சிறப்புப் படைப் பிரிவினர் உள்ளே புகுந்து இந்திய வீரர்கள் இருவரைக் கொன்றனர். அவர்களில்ஒருவரது தலையைத் துண்டித்துச் சென்றனர் என்பது நினைவிருக்கலாம்.
கடுமையாக இருக்க வேண்டும்
இதுகுறித்து பிக்ரம் சிங் கூறுகையில், எல்லைப் பகுதியில் எதிரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினால் எனது கமாண்டர்கள் அதற்கு கடுமையான பதிலடி தர வேண்டும் என்று விரும்புகிறேன். இதில் சமரசமே கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications