Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: சென்னையில் வைகோ உட்பட 200 பேர் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 16 இயக்க தலைவர் திருமுருகன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசுகையில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைத்தால் அதன் மூலம் ஏற்படும் பாதிப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நமது சந்ததிகளை அழித்து விடும். எனவே தான் அணு உலை எதிர்ப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். அணு உலையில் இருந்து வெளியேறும் அணு கழிவுகள் கடலில் கொட்டப்படும். இதனால் கடல் வாழ்வாதாரம் பாதிக்கும்.

Protest will continue til the closure of KKNPP, says Vaiko

இலங்கையில் தமிழர்கள் உயிர்களை அழித்தது போதாது என்று மத்திய அரசு மேலும் தமிழர்களின் வாழ்வை சீர் அழிக்க அணு உலை மூலம் முடிவு செய்து உள்ளது. கூடங்குளம் அணு உலை மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 900 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் தினமும் அங்கிருந்து 140 மெகாவாட்டுக்கு மேல் தர முடியாது என்பது தான் உண்மை.

Protest will continue til the closure of KKNPP, says Vaiko

மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களை ஏமாற்றுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். கூடங்குளம் அணு உலை மூட படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். கடந்த மே 6-ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நிபந்தனைகளை அமல் படுத்தாமல் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டு உள்ள வழங்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வாபஸ் பெறவில்லை.

தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 59 விஞ்ஞானிகள் பழுதடைந்த கருவிகளின் உதிரி பாகங்கள் கூடங்குளத்தில் பயன்படுத்த படுவதாகவும் அதை அகற்றி விட்டு புதிய உதிரி பாகங்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதை கண்டு கொள்ளவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+