பிலிப்பைன்சில் இந்தியர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் டவாவோ நகரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராமன்தீப் சிங் கில் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார்.
டவாவோ நகரில் வெள்ளிக்கிழமை காலை ஓல் எமர்ஸ் பீச் ரிசார்ட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 30 வயதான ராமன்தீப் சிங் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமன்தீப் சிங் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அண்மைக் காலமாக டவாவோ நகரில் நிகழ்ந்துள்ள 38வது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications