பிரமாண்டக் கூட்டத்துடன் பாஜக தேர்தல் பிரசாரத்தை ஹைதராபாத்தில் தொடங்கினார் மோடி
ஹைதராபாத்: பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தில் தொடங்கினார்.
ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு தனது முதல் பிரசார உரையை நிகழ்த்தினார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அவரது இந்த முதல் பிரசாரக் கூட்டம் பெரும் கவனிப்புக்குரியதாக மாறியிருந்தது.
மோடி தனது உரையில் காங்கிரஸுக்கு எதிராக என்னை மாதிரியான திட்டங்களை, பிரசாரத்தை, கோஷத்தை வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் பொதுவான உரையாகவே அது இருந்தது.

பெரும் கூட்டம்
மோடியின் இந்தக் கூட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜக தரப்பு எதிர்பார்த்தது. அதற்கேற்ப பெரும் கூட்டம் கூடியிருந்தது.

முதல் தேர்தல் கூட்டம்
பாஜகவின் முதல் லோக்சபா தேர்தல் பொதுக் கூட்டம் என்பதால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

புதிய சிந்தனை புதிய நம்பிக்கை
பாஜக தனது தேர்தல் பிரசார ஸ்லோகனாக, புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளது. இது இந்த கூட்டத்தில் வெளியிடப்படும்.

ஹைதராபாத் முழுவதும் மோடி மயம்
ஹைதராபாத் நகரம் முழுவதும் மோடியின் போஸ்டர்கள்தான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications