சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை மீண்டும் இடிந்தது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட மேற்கூரை மீண்டும் இடிந்து விழுந்துள்ளது.
3 மாதங்களுக்குள் மீண்டும் மேற்கூரை இடிந்ததால் பரபரப்பும், கட்டுமானத் தகுதி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
அதிகாலையில் இந்த விபத்து நடந்தது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

புதிய உள்நாட்டு முனையம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2200 கோடி செலவீட்டில் புதிய உள்நாட்டு முனையம் கட்டப்பட்டது.

3 மாதங்களுக்கு முன்பு இடிந்த மேற்கூரை
இந்த முனையத்தில் 3 மாதங்களுக்கு முன்பு விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் இன்று விபத்து
இந்த நிலையில் இன்று மீண்டும் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பயண அட்டை கவுன்டர் பகுதியில்
இண்டிகோ விமானங்களில் ஏறுவதற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

100 மீட்டருக்கு இடிந்தது
300 அடி நீளமும், 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

மழை நீர் தேங்கியதால்
மழை மற்றும் ஏசி மெஷினிலிருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதிகாலையில்
அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications