திருவனந்தபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த இடதுசாரிகளின் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம்!
திருவனந்தபுரம்: சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சோலார் ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக முடியாது என்று மறுத்து வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான இடது ஜனநாயக முன்னணி வலியுறுத்தி வருகிறது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது தலைமைச் செயலக ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. முதல்வர் உம்மன் சாண்டியின் வாகனத்தைத் தவிர மற்ற அமைச்சரின் வாகனங்கள் தலைமைச் செயலகத்துக்குள் நுழைய முடியவில்லை. இருப்பினும் போராட்டக்காரர்கள் சிலர் உம்மண் சாண்டியின் காரையும் வழிமறிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும் இடதுசாரி தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், உம்மன் சாண்டிக்கு தெரிந்தே இந்த ஊழல் நிகழ்ந்துள்ளது. தமது உறவினர் ஒருவர் லஞ்சப் புகாரில் கைதானதால் ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தார். அதேபோல் உம்மன் சாண்டியும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

இப்போராட்டத்தில் இடதுசாரிகளுடன் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவே கவுடாவும் கலந்து கொண்டார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications