தெலுங்கானாவுக்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம்! பேருந்துகள் முற்றிலும் நிறுத்தம்!
திருமலை: தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது; அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்துள்ளதால் திருப்பதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர் சங்கங்களால் முன்வைக்கப்பட்டது.
ஆனால் இதை அமைச்சர்கள் ஏற்காதததால் 4 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக அரசு ஊழியர் சங்கத் தலைவர் பி.அசோக் பாபு தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அரசுப் பணிகளும் போக்குவரத்து சேவையும் முடங்கிவிட்டது. திருப்பதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்துக்கான பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருப்பதி உள்பட சீமாந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications