Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கு ரத்து கோரும் புல்லரின் மறுஆய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

Subscribe to Oneindia Tamil

SC rejects convict Devender Pal Bhullar's review plea
டெல்லி: டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்துச் செய்யக் கோரி தேவேந்தர்பால் சிங்க் புல்லர் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

டெல்லியில் 1993-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமது கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுக்கப்பட்டதால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புல்லர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து புல்லருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மார்க்கண்டேய கட்ஜு மற்றும் பல்வேறு சீக்கிய அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர் உச்சநீதிமன்றத்தில் புல்லர் சார்பில் மறு ஆய்வு மனு ஒன்றும் மே முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

புல்லர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜரானார். இம்மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் புல்லரின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தற்போது புல்லரின் மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கான தூக்கு நிறைவேற்றப்படலாம். அல்லது முன்னைப் போல பஞ்சாப் மாநில அரசு மீண்டும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கருணை மனு கோரலாம் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+