நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை பேஸ்புக்கில் பிரமாதமாக வரவேற்கும் மக்கள்!
சென்னை: இதோ இன்னும் ஒரு சுதந்திர தினம் வந்து விட்டது... கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர் - பல வழிகளில்.
இது சமூக வலைத்தள காலம்... எனவே பேஸ்புக், டிவிட்டர்களிலும் சுதந்திர தினத்தை மக்கள் இப்போதே ஒவ்வொரு விதமாக வரவேற்று வருகின்றனர்.
புரபைல் படங்கள், கவர் படங்களை தேபக்தி கொண்டதாக மாற்றியும், தேச பக்தி வாசகங்களை டைம்லைனில் போட்டும், பிறருடையதை டேக் செய்தும், ஷேர் செய்தும் விதம் விதமாக சுதந்திர தினத்தை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர்.
பேஸ் புக் பக்கம் ஒரு ரவுண்டு விட்டபோது நமது கண்ணில் சிக்கியவை இவை....

இந்தியாவுக்காக துடிக்கும் இதயம்
தேசத்திற்காக துடிக்கும் இதயத்தை நினைவூட்டுகிறது இந்த அழகான படம்.

கூகுளுடன் சேர்ந்து
கூகுளின் சுதந்திர தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த அன்பரும் சேர்ந்து சுதந்திர தினத்தை வரவேற்கிறார்.

தேசம் என்றாலே பெருமைதானே...
தேசம் என்றாலே பெருமிதமும், பெருமையும்தானே...அதைத்தான் இது வெளிப்படுத்துகிறது.

வந்தேமாதரம்
இந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லவே வேண்டாம்.. உணர்வோடு கலந்த ஒன்றாயிற்றே...

அதர்வா முரளியின் ஷேர்
நடிகர் அதர்வா முரளி தனது பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஒரு படம்.

வீர வணக்கம்...
இந்த மூவண்ணக் கொடியை பட்டொளி பறக்க விடுவதற்காக சிந்தப்பட்ட ரத்தத் துளிகள் எத்தனை.. துடித்ததுடிப்புகள் எத்தனை.. பட்ட பாடுகள் எத்தனை... சல்யூட் வைப்போம் மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த நம் முன்னோர்களுக்கு.












Click it and Unblock the Notifications