பிரதமரின் சுதந்திர தின உரை.. நரேந்திர மோடி கடும் சாடல்! பரம்பரை அரசியலுக்கு கண்டனம்!!

Subscribe to Oneindia Tamil

பூஜ்: பிரதமர் மன்மோகன்சிங் தமது சுதந்திர தின உரையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை ஏன் தெரிவிக்கவில்லை? என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டம் பூஜ் நகரில் சுதந்திர தின உரையாற்றிய மோடி, செங்கோட்டையில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க முடியும் என்று நான் நம்புகிறவன் அல்ல.. ஆனால் நமது ராணுவத்தினருக்கு ஊக்க சக்தியாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.

Narendra modi

அப்படியான நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தமது சுதந்திர தின நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமது சுதந்திர தின உரையில் ஊழல் குறித்த கவலைகளைத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கவலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பு. ஆனால் பிரதமரின் சுதந்திர தின உரையில் ஊழலுக்கு எதிரான எந்த ஒரு கருத்தும் இல்லையே? இந்த கேள்விக்கு மக்களுக்கு பதில் இல்லையே?

பிரதமர் மன்மோகன்சிங், ஒரு குடும்பத்துக்கு மட்டும் அர்ப்பணிப்பு உள்ளவராக இருக்கிறார். மற்ற அனைத்தையும் அவர் மறந்துவிட்டார். இந்த நாட்டை பிடித்த நோயாக இருக்கிறது பரம்பரை அரசியல்.

நாட்டின் முன் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் தயாரா? என்றார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+