கள்ளக்காதலிலையை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு மனைவியுடன் தப்பிய கணவர்
பொள்ளாச்சி: திருமணம் செய்து கொள்ளுமாறும், மனைவியை விட்டுப் பிரிந்து வந்து விடுமாறும் வற்புறுத்திய தனது கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு பின்னர் தனது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பருடன் தலைமறைவான நபரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரகாஷ் குமார். இவரது மனைவி 32 வயதான சத்யபாமா. இவர்கள் இருவரும் ஊஞ்சவேலமபட்டி கிராமத்தில் சமீபத்தில் வாடகைக்கு குடியமர்ந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றனர். ஆனால் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் குமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துப் போய் பார்த்தபோது அங்கு ஒரு இளம் பெண் பிணமாகக் கிடந்தார். அவரது உடல் சிதைந்து போயிருந்தது.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண்ணின் பெயர் ஜெகதாம்பாள் என்றும் 28 வயதாவதும், அவர் நாகேந்திர குமார் என்பவரின் மனைவி என்றும் தெரிய வந்தது.
ஜெகதாம்பாளும், பிரகாஷ் குமாரும் கள்ளக்காதலர்கள். இந்த நிலையில் சத்யபாமாவை விட்டு விட்டு தன்னுடன் வந்து விடுமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி வந்துள்ளார் ஜெகதாம்பாள். ஆனால் இதை ஏற்கவில்லை பிரகாஷ் குமார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர் ரூபன்ராஜ் என்பவரிடமும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெகதாம்பாளை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் பிரகாஷ் குமார். அங்கு வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு மூன்று பேரும் தப்பியோடி விட்டனர்.
போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர். அதில் நாகர்கோவில் அருகே பதுங்கியிருந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications