For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதப் பிரசாரத்துக்காக ஈரோடு வரும் உமாசங்கர் ஐஏஎஸ்... தடை செய்யக் கோரிக்கை

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு மதப் பிரசாரம் செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் வருகிறார். அவர் வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எனவே அவருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் தர்ம பிரசார சமிதி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைப்பின் மாநில அமைப்பாளர் ஜி.எஸ்.ராஜகுரு தலைமையில், நிர்வாகிகள் குழு ஒன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக மனு அளித்துள்ளது.

அதில், ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு மதப்பிரசாரம் செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவர், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதப் பிரசாரம் செய்யும் கூட்டங்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனால் ஈரோடு மாவட்டத்துக்குள் உமா சங்கர் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

English summary
A movement has sought the Erode collector to ban Umashankar IAS from entering into the district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X