லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுக்க கருணாநிதி, அன்பழகனுக்கு அதிகாரம்!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில்,
- லோக்சபா தேர்தல் தொடர்பான கூட்டணி உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் அதிகாரம் திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொதுச்செயலர் அன்பழனுக்கும் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைக்கு மூடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு
- தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை மற்றும் சிங்கள மீனவர்களின் தாக்குதல்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் வாழக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதற்கு கண்டனம்
- விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில் தொடரும் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பிரச்சனைகளுக்காக அறப்போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications