செளதி: வீட்டுவேலை வாங்கி தருவதாக சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பாகிஸ்தானியர் கைது
ஷார்ஜா: பாகிஸ்தான் சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து ஷார்ஜாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாகிஸ்தானியர் ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஷார்ஜாவில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் குறிப்பிட்ட வீட்டினுள் சுமார் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலர் அடைத்து வைக்க பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஷார்ஜாவில் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்துவந்து, அவர்களை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications