உடனே சரத்குமார் பதவி விலக வேண்டும்.. ஜெ. அன்பழகன்
இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்கள் அனைவருக்கும் தற்போது தலைவா திரைப்படம் தேவை. தலைவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் தைரியம் எனக்கு இருக்கிறது.
நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் தலைவா பிரச்சனையில் என்ன முயற்சி எடுத்திருக்கிறார். முதலமைச்சரின் வலதாக இருக்கும் சரத்குமார் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எவ்வித தீர்வு காணவும் முயற்சி செய்யாத சரத்குமார் நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும். வேறொருவர் அந்த பதவிக்கு வரவேண்டும்.
தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் ரசிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். ரசிகர்களுக்காகத்தான் திரைப்பட கலைஞர்கள் வேலை செய்கிறோம். தியேட்டரில் படம் பார்ப்பதெற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கையில், திரைப்படம் எதில் வெளிவந்தாலும் பயமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது அன்பு பிக்சர்ஸ் மூலமாக தமிழகம் மற்றும் புதுவையில் 300 தியேட்டர்களில் தலைவா படத்தை தைரியமாக வெளியிட நான் தயார் என்று அதிரடியாக அன்பழகன் அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.