பெல்காம் சிறையில் 2 கைதிகளின் தூக்கை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை!

Subscribe to Oneindia Tamil

Hanging Rope
பெல்காம்: கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் 2 கைதிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த சிவ் முனிஷெட்டி, ஜடேஸ்வாமி ரங்கா ஷெட்டி ஆகியோருக்கு பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு கடந்த 13ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இதனால் இருவரையும் நாளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனிடையே இருவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிவ் முனிஷெட்டி திடீரென இன்று தமது கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே நேரத்தில் இரு கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், 4 வாரத்துக்கு அவர்களை தூக்கிலிடவும் தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+