For Daily Alerts
Just In
இன்று மாலை அல்லது இரவில் இடியுடன் மழை பெய்யக் கூடுமாம்...!
சென்னை: சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பெரிய அளவில் இல்லை. குறிப்பாக சென்னையில் சற்றே மழை குறைந்துள்ளது. நேற்று புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் லேசான மழை காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Weather office has said that there may be some rain with thunder in Chennai this evening.
Story first published: Wednesday, August 21, 2013, 8:27 [IST]