சமூக வலைதளங்களில் வந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் கருணாநிதி!
தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் வாழும் மூத்த முன்னோடி பத்திரிகையாளர் கருணாநிதிதான். அவரது தொண்டர்களுக்கான உடன்பிறப்பே கடிதம் பல சரித்திரங்களைப் பேசக் கூடியது. இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக 'கேள்வி- பதில்' பாணியிலான அறிக்கை வடிவமும் ஒரு முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டி நின்றது.
இந்த வரிசையில் தற்போது சமூக வலைத் தளங்களில் வந்த கேள்விகளுக்கான பதில் என்ற தலைப்பில் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் கருணாநிதி.
இன்று அவர் ஃபேஸ்புக்., ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டிருக்கும் கேள்வி பதில்கள்:
கேள்வி : தற்போது என்னைப் போன்று உள்ள இளைஞர்களுக்கு எமர்ஜென்சி காலம் என்றால் என்ன என்றே எங்களுக்கு தெரியவில்லை, அதனைப் பற்றி கூறினால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு எமர்ஜென்சி காலம் என்னவென்று தெரியவரும் ?
பதில் : இன்றைய தமிழகமே இதற்கு சான்று !
கேள்வி : நீங்கள் 1957ல் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பணி புரிந்து வருகின்றீர்கள், அப்போது உள்ள சட்ட மன்றத்திற்கும், தற்போது உள்ள சட்ட மன்றத்திற்கும், அரசியல் கட்சித் தலைவர்களின் செயல்பாட்டிற்கும் உள்ள வித்யாசங்கள் என்ன ?
பதில் : அது ஒரு பொற்காலம் !
கேள்வி : உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் ?
பதில் : பிடெல் காஸ்ட்ரோ என்று கூறியுள்ளார்.