தனக்கு ஓட்டு போடாதவர்கனின் வீடுகளை இடித்த ஊராட்சி மன்ற தலைவர்: கிராம மக்கள் புகார்
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தனக்கு ஓட்டு போடவில்லை என்ற காரணத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் திட்டமிட்டு வீடுகளை இடித்தாக கிராமமக்கள் புகார் கூறியுள்ளனர்.
மானாமதுரை ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியைச் சேர்ந்தது பாப்பான்குளம் கிராமம்.சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராணி சோனைமுத்துவும், மதிமுகவைச் சேர்ந்த அம்சவள்ளிதங்கராசுவும் போட்டியிட்டனர். பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் இதுவரை இவர்கள் இருவர் மட்டுமே மாறி மாறி தலைவர் பதவி வகித்து வருகின்றனர். ஒருவர் பதவியேற்றவுடன் எதிர்தரப்பினருக்கு ஓட்டுப்போட்டவர்களை பழிவாங்குதை முதல் வேலையாக வைத்துள்ளனர். தற்போது பொறுப்றேற்ற அம்சவள்ளி தங்கராசும் அந்த வேலையை செய்ய ஆரம்பித்துள்ளார். இரு தரப்பினரும் மீதும் மானாமதுரை மற்றும் சிப்காட் காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராம காலனியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பசுமை வீடு, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட திட்டத்தின் கீழ் பலரும் 40 வருடங்ஙகளாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். தற்போதைய சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அம்சவள்ளிக்கு காலனிவாசிகள் ஓட்டு போடவில்லை என்று கூறப்படுகிறது. இதனை முன்விரேதமாக கொண்டு அம்சவள்ளியின் க வர் தங்கராசு அரசு நிலத்தில் ஆக்ரமித்திருப்பதாக கூறி வீடுகளை இயந்திரங்கள் மூலம் சுதந்திர தினத்தன்று தொடங்கி மூன்று நாட்களாக இடித்துள்ளார்.
கிராம மக்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வெளியே சொல்ல கூடாது என தடுத்துள்ளார். 50க்கும் மேற்பட்ட வீடுகளை சராமாரியாக இடித்துள்ளார். இதில் அவருக்கு ஓட்டு போட்டவர்களின் வீடுகளை தவிர்த்து மற்ற வீடுகளை குறிவைத்து இடித்தாக கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக இந்திரா என்பவர் கூறுகையில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1லட்சத்து 30ஆயிரம் பணமும் கையில் வைத்திருந்த பணத்தையும் வைத்து 4 லட்ச ரூபாய்க்கு வீடு கட்டியுள்ளேன், இதில் ஒரு லட்ச ரூபாய் மட்டும் பெற்றுள்ளேன், தலைவர் 10ஆயிரம் லஞ்சமாக பெற்று கொண்டார். இன்னமும் 30ஆயிரம் வரவில்லை அதற்குள் வீட்டை இடித்துவிட்டனர் என்றார். வேணி என்பவர் கூறுகையில் எனது மகளுக்கு வரும் 30ம் தேதி திருமணம் வைத்துள்ளேன். இந்நிலையில் திருணமத்திற்காக வீட்டை புதுப்பித்து வெள்ளையடித்துள்ளேன் இந்த சமயத்தில் ஏன் ஓட்டு போடவில்லை என கூறி வீட்டை இடித்து விட்டனர் என்று கூறி கதறி அழுதார்.
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராசு கூறும் போது ஆக்ரமித்து வீடு கட்டினர் அதனால் இடித்தோம் என்று கூறியுள்ளார். பாப்பான்குளம் கிராமத்தில் ஆக்ரமிப்பு என்பது வெறும் ஒரு அடி மட்டும்தான் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஓட்டு போடவில்லை என்ற காரணத்தை கூறி வீடுகளை இடித்ததுடன் கிராமமக்களை வெளியில் சொல்ல கூடாது என தடுத்து மிரட்டியுள்ளார் ஊராட்சி மன்ற தலைவர். அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தும் ஊராட்சி மன்ற தலைவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக மானாமதுரை பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையில் குழந்தைகளுடன் வெட்ட வெளியில் பரிதவித்து வருகின்றனர் கிராமமக்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications