For Quick Alerts
For Daily Alerts
Just In
மெட்ராஸ் கபே வேண்டாம்... வெடித்தது மாணவர் போராட்டம்.
சென்னை: மெட்ராஸ் கபே படத்தைத் திரையிடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படத்தைத் தடை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். மெட்ராஸ் கபே படத்திற்கு தடை கோரும் போராட்டம் அனைத்து நாடுகளிலும் வலுவடைந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் 200 பேர் உயர்நீதிமன்றம் அருகே சாலையில் மெட்ராஸ் கபே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பேரணியாக சென்றனர். பின்னர் திடீர் என சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
அதேபோல தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பின் சேலம் மாவட்ட அமைப்பாளர் சிவா தலைமையில் சேலம், மேட்டூரில் மெட்ராஸ் கபே படத்தை வெளியிட தடை கோரி உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.
Comments
English summary
Nearly 200 law students agitated against Madras Cafe in Chennai today.