ஊர் ஊராக சுற்றியலைந்த காமக் காதலர்கள்.. கடைசியில் தற்கொலை
திருச்சி: காமத்தின் தூண்டுதலால் குடும்பங்களை விட்டு விட்டு ஊர் ஊராகப் போய் உல்லாசமாக இருந்து விட்டு கடைசியி்ல் விஷம் குடித்து செத்துப் போயுள்ளது ஒரு கள்ளக்காதல் ஜோடி...
திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டையை அடுத்த மல்லாட்சிபுரம் கொடிங்கால் வாய்க்கால் பகுதியில் ஒரு இளம் பெண்ணும், ஆணும் இறந்து கிடந்ததை சிலர் பார்த்து போலீஸாருக்குத் தெரிவி்த்தனர்.
உடனடியாக ஜீயர்புரம் போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டனர். இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்தது தெரிய வந்தது. அருகில் ஒரு செல்போனும் இருந்தது. அதில் உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
காமவெறி...
அந்த ஆண், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள வடக்கு பொன்னம்பட்டியை சேர்ந்த செல்வராஜ். 40 வயதாகிறது. விவசாயி. இவருக்கு அழகுமலை என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதே தெருவில் வசி்த்து வந்தவர் 35 வயதான சாந்தி. இவருக்கு மருதமுத்து என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். மருதமுதது மஸ்கட்டி்ல வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவர் துணையின்றி குழந்தைகள், மாமியாருடன் வசி்த்து வந்தார் சாந்தி.
கணவர் இல்லா சாந்திக்கும், செல்வராஜுக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது. தீவிரமாக அதில் இறங்கினர். இது இரு வீட்டாருக்கும் தெரிய வந்து கண்டித்தனர். ஆனால் காமம் கண்ணை மறைக்கவே இருவரும் துணிந்து காமக் காதலில் திளைத்து வந்தனர்.
இந்த நிலையி்ல் 6 மாதங்களுக்கு முன்பு மருதமுத்து திரும்பி வந்தார். அதன் பிறகு அவர் மஸ்கட் போகவி்லை. இதனால் சாந்திக்கு சிக்கலானது. அடிக்கடி போய் செல்வராஜைப் பார்க்க முடியவி்ல்லை. தவி்த்தார். இதனால் ஊரை விட்டு ஓட முடிவு செய்தனர்.
உடம்பு சரியில்லை என்று பொய்...
இதையடுத்து உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி விட்டு கடந்த 14ம் தேத வீட்டை விட்டு வெளியேறினார் சாந்தி. அதேபோல செல்வராஜும் கிளம்பி வந்தார். இருவரும் ஊர் ஊராகப் போய் காம விளையாட்டில் திளைத்தனர். கையில் இருந்த காசு தீரும் வரை விளையாடிக் கழித்தனர்.
கடைசியாக முக்கொம்பு வந்துள்ளனர். அங்கு வந்து தங்களது நிலையை நினைத்துப் பார்த்துள்ளனர். அவர்களுக்கே வாழ்க்கை வெறுத்து விட்டது. குளிர்பானத்தை வாங்கி விஷம் கலந்து குடித்து செத்துப் போனார்கள்.
இறந்து நான்க நாட்களாகி விட்டதால் உடல் கருமையாகி பார்க்கவே படு கோரமாக காணப்பட்டனர் இந்த கள்ளக்காதலர்கள். துர்நாற்றமும் சகிக்கவில்லை. போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு இரு உடல்களையும் அனுப்பி வைத்து விசாரணையைத் தொடர்கின்றனர்.
காமக் காதலுக்கு கடைசியில் இதுதான் முடிவு போல...!












Click it and Unblock the Notifications